மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பிரதான அதிகாரிகள் மூவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
7 கோடி ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து அந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இது தொடர்பாக விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.