முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடமிருந்து 500 மில்லியன் ரூபாவை நஷ்டஈடு கோரி கொழும்பு முன்னாள் பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர நேற்று(12) நோட்டீசு அனுப்பியுள்ளார்.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் அந்த நோட்டீசில் மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.