முழு இரவையும் தூங்காமல் கழித்த யோசித்த

வரும் பதின்மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் கொழும்பு ரிமாண்ட் சிறைசாலைக்கு அழைத்துவரப்பட்ட யோசித்த அங்குள்ள கட்டணம் செலுத்தப்பட்ட வார்டுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைசாலை  வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் யோசித்த ராஜபக்ஷ இன்று விடியும் வரை தூங்காமல் முழு இரவையும் கழித்ததாக சிறைசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.