முஸம்மில் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில்..

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அது , அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் விற்பனை கண்காணிப்பு அதிகாரிகளை இணைத்துக் கொள்ளும் போது மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவாகும்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனராக இருந்த காலத்தில் இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.