முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய காபந்து அரசின் அமைச்சரவையில் சிறுபான்மையினரில் முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா அல்லது காதர் மஸ்தான் ஆகிய இருவரில் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இன்று(25) 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவிருந்த நிலையில், குறித்த நியமனங்கள் நாளை(26) அல்லது நாளை மறுதினம் (27) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.