(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் நிலவிய அமைதியற்ற நிலைமை காரணமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு மீளவும் குறித்த அமைச்சுக்களை வழங்குமாறு பிரதமரினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் செயலாளர் சமன் ஏகநாயக்கவினால் இது தொடர்பிலான கடிதம் நேற்றுமுன்தினம் (23) ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.