மூடப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை(26) ஆரம்பம்..

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் இன்று(25) மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் பதிவாளர் கேட்டுள்ளார்

குழப்பநிலை காரணமாக குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.