மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.