மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

வறட்சி காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று(01) ஆரம்பமாகவுள்ளன.

இதனைத்தவிர, சமூக விஞ்ஞானம், மனித வளம் ஆகிய பீடங்கள், பரீட்சைகளுக்காக இன்று(01) திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.