மெத்தியூஸ் இனது தலைமைப்பதவியினை தாங்குகிறார் ரங்கன ஹேரத்..

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் காயம் காரணமாக சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.

குறித்த இந்த டெஸ்ட் தொடர் இம்மாதம் 29ம் திகதி சிம்பாப்வேயின் ஹராரே நகரில் ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும் ஒருநாள் தொடரில் அணித் தலைவர் மெத்தியூஸை இணைத்துக் கொள்வதற்காக எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உபாதை காரணமாக தினேஷ் சந்திமாலும் குறித்த தொடரில் பங்குபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.