அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாலையை கடக்க முற்பட்ட பாதசாரிகள் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காரை செலுத்தி வந்த சாரதி உள்ளிட்ட இருவரையும் அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இது போல கூட்டமாக மக்கள் இருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதால், இது அதுபோன்ற தாக்குதலாக இருக்குமோ என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன.