மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையான அவன்காட் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ, வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று(11) அனுமதியளித்துள்ளார்.
ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதிவரையான காலத்தில் கட்டார், டோஹாவில் நடைபெறவுள்ள தடகள மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கே அவருக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.