மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக யசந்த கோதாகொட நியமனம்…

(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி செய்த பரிந்துரைக்கு, அரசியலமைப்புப் பேரவை அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.