மேலதிகமாக 250 பேரூந்துகள் சேவையில்

(FASTNEWS|COLOMBO) – ரயில் ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் மேலதிகமாக 250 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.