(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வீதி ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மேலதிக இடவசதி வழங்க பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு தொடர்பில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, வீதி ஒழுங்கு முறைமைகளை மீறிவோருக்கு எதிராக 2,000 ரூபா அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.