மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 254 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.