மேலும் 14 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1917 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது