மேலும் 414 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தலில் இருந்த 62 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 352 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,619 ஆக அதிகரித்துள்ளது.