மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 22 பேர் உட்பட பேலியகொட வளாகத்தில் 06 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 22 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.