மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக, நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.