நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தில் இன்று(29) பெய்து வரும் கடும் மழையினால் மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
####