மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறப்பு…

மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் இன்று(16) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.