மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் நேற்று(03) பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நீரோட்டத்தின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் இதன் கரைகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.