இலங்கையில் வழக்குகளை விசாரிக்க எடுக்கும் காலத்தை குறைக்கும் நோக்கத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 இல் இருந்து 87 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் நீதிமன்ற அபிவிருத்திச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் சட்ட வரைவாளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வேலைகள் பூர்திசெய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்ற அபிவிருத்தித் திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அது நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.
அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக இன்று(09) பாராளுமன்றத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான தேவையான பணிகள் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…