மேல் மாகாண குடும்பங்களுக்கு அரசினால் நிதி உதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

மேலும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் மற்றைய மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.