மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் 15 மே தினப் பேரணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக 2,600 இற்கும் அதிகமான காவற்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் , வாகன போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்காக மேலும் 1,500 காவற்துறை அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , மே தினப் பேரணிகள் காரணமாக கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் எதிர்வரும் 30ம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து திட்டமொன்று செயற்படுத்தப்படவுள்ளது.
குறித்த போக்குவரத்து திட்ட முறைமைகள்..









