பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் கிடைக்கப்பெறும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை தடுப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவுமிக்க நாடாக இலங்கையை உலகத்தின் முன் கொண்டு செல்வதே நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.