கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.என்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவு பெற்றுள்ளதுடன், இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப நிலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக இம்முறையும் கூடுதலான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.