மைத்திரிக்கு ஆப்பு – குமார வெல்கம நாளை ஜனாதிபதி தேர்தல் களத்திற்கு [EXCLUSIVE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சுயேட்சை வேட்பாளராக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி, நாளைய தினம்(04) குமார வெல்கம சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்த உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கான செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.