மைத்திரியின் துரும்பு – ரணில், ரவி கைது விரைவில்..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை எஹிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக கைது செய்து விளக்கமறியலில் வைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இணையத்தள செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68வது மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறைமுகமாக இதனை தெரிவித்ததாகவும் குறித்த செய்தியில் கூறப்படுகின்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர்கள் மூவர் சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் குற்றச்சாட்டில் இவ்வாறு பிரதமர் மற்றும் அமைச்சர் ரவியினை கைது செய்ய திட்டம் தீட்டுவதாக கூறப்படுகின்றது.