மைத்திரியின் மரண தண்டனை முயற்சியால் பேரழிவு தான் எஞ்சும் – Richard Branson சிவப்பு சமிஞ்ஞை

(FASTGOSSIP| COLOMBO) – சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(26) தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் உலகின் பெரும் செல்வந்தனர்களில் ஒருவரான Richard Branson கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை கொண்டுவர விரும்புகின்றார். மரண தண்டனை பேரழிவை தரக்கூடிய அதேவேளை, ஒரு போதும் தீர்வாகாது” என Richard Branson தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவு: