மைத்திரியை கைவிட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயார் – SB..

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.