கொழும்பு – கங்காராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வுகளில் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, கொழும்பு நவ கோரலையின் பிரதான தலைமை விகாராதிபதி மற்றும் கொழும்பு, ஹுனுபிடிய கங்காராம விகாராதிபதியான கலாநிதி.சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேருக்கு விரைவில் உடல் நலமடைய பிராத்தனைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






