ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூவரும் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளமை விஷேடமானது.
(riz)