மொட்டில் களமிறங்கியுள்ளோர் கிரிமினல் குற்றாவாளிகள்.. – SB

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், குற்றவாளிகளும், ஊழல் செய்தவர்களும் இடம்பெற்றிருப்பதாக, அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டியில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில்;

“..கொலை குற்றவாளிகளும், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கட்சியை விட்டு நீக்கியவர்களும், மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்கப்படாது..” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#G-Reesh