மத்திய மாகாண சபையின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும், 10 உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் எதிர்கால செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்து நேற்று(19) மத்திய மாகாண சபையின் பிரதி தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் மாகாண சபையின் துணைத் தலைவர் ஆர்.எஸ்.பீ.ரத்னாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், நிமல் பியதிஸ்ஸ, குணதிலக ராஜபக்ஷ, கமல் பெளிகொள்ள, வீரசிங்க அலுத்கமகே, டீ.ஜீ.ஜயதிஸ்ஸ, ஜீ ஜயசிங்க, திலக் பண்டார, பராக்கிரம திசாநாயக ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.