கடந்த ஆகஸ்ட் மாதம் பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா அரசியல் தலைமைகள் சிலரை கொலை செய்ய திட்டமிட்டதாக குறித்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.