முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுக் கொள்ள மனுதாரர் தீர்மானித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளதால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதம நீதியரசர் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதாகவும் அவருக்கு எதிரான மனுவை ஜூலை 27ம் திகதி மீளப் பெற்றுக் கொள்வதாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளார்.