(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை தமது சேவைகள் வழங்கப்படும் எனவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

