மோதலில் ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை – தல்பாவில பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மரண வீடொன்றில் சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட முரண்பாட்டிற்கு பலி வாங்கும் நோக்கத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.