களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதல் நிலைமை பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலையீட்டின் பின்னர் நிறைவுக்கு வந்ததாக கிரிபத்கொடை காவற்துறை தெரிவித்துள்ளது.
எனினும் , குறித்த இந்த மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை தவிர மற்றைய பீடங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் இன்று(05) மதியம் 12 மணிக்கு முன்னர் அங்கிருந்த வௌியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)