யால தேசிய வனப் பூங்கா நாளை(01) முதல் மூடப்படுகின்றது..

நாட்டில் தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக யால தேசிய வனத்தை நாளை(01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்திருந்தார்.

அதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளதோடு, மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் நவம்பர் மாதம் 01ம் திகதி மீண்டு யால தேசிய வனம் திறக்கப்படும் என்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார மேலும் கூறினார்.