யாழ்ப்பாணத்தில் சிவில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களையடுத்து யாழ்பாணத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ்  தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனால் யாழ்ப்பாணம் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.  தேவை ஏற்படின் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் எந்தவொரு அவசர நிலமையின் போதும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.