யாழ்.தற்கொலைக் குண்டு அங்கி ஜனாதிபதியின் உயிரினை இலக்குவைத்தா தயாரிக்கப்பட்டதா?

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் இளங்கு வைத்து படுகொலை செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பிரபல ஆங்கில ஊடகம்  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

குறித்த விகயத்தின் போது; யாழ்.நகரில் உள்ள இரண்டு விடுதிகளையும், வவுனியாவில் வீ்டமைப்புத் தொகுதியையும் அவர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சாவகச்சேரிப் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணப் பயணத்தை ரத்துச் செய்யுமாறு படைத்தரப்பினால், ஜனாதிபதியினை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க யாழ். சென்றிருந்த அதிபர் பாதுகாப்புப் பிரிவினர், திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது,