யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முகாமைத்துவ மற்றும் பிரயோக பீடங்கள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது, குறித்த பல்கலையின் இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.