யாழ்.பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் வர்த்தகத்துறைகள் ஆரம்பம்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கலை மற்றும் வர்த்தகத் துறையை சேர்ந்த மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
பல்கலைக்கழகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளே இவ்வாறு இன்று ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.