யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமானது இன்று மீண்டும் ஆரம்பம்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமானது இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இங்கு இடம்பெற்ற மோதல் நிலைமையினால் பல்கலைக்கழகங்களின் அனைத்துபீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டதுடன், ஒரு சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த வாரங்களில் ஆரம்பமாகின.

எனினும் மோதலுடன் தொடர்புடைய விஞ்ஞான பீடம் இன்றைய தினமே மீண்டும் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.