யாழ். பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 4 மணி முதல் சுற்றிவளைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் அதே போன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலையே இன்று யாழ் பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.