யாழ்.பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளுக்கு விளக்கம்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில், இலங்கையின் இராணுவத்தினர், ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் தொடர்பான அறிக்கையாளரிடம் விளக்கமளித்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர், ரீட்டா இசாக் இடையே நேற்று(16) யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க வைசந்தித்தார்

குறித்த இந்த சந்திப்பு பலாலி படைத்தளத்தில் நடைபெற்றது. இதன்போது பாதுகாப்பு விடயங்கள், கடத்தல்கள் மற்றும் மனிதக்கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மஹேஸ் சேனாநாயக்க விளக்கமளித்தார்.

இதேவேளை நல்லிணக்க அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.