யுஎஸ் மிலேனிய வேலைத்திட்டம் – மஹிந்த விசேட ஊடக அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட யுஎஸ் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 480 மில்லியன் அமெரிக்கா டொலர் மானியத்தை பெறுவது தொடர்பிலான வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று(31) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கையில், “ஒரு தீர்க்கமான ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் எந்தவொரு உடன்படிக்கையும் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடக் கூடாது என்று வலுவான விதிமுறைகள் உள்ளது என்பதை நினைவூட்டுகிறோம். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தான் அத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட வேண்டும்…” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை